search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் வீரர் பலி"

    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கிரிக்கெட் பயிற்சியின் போது திடீரென மின்சாரம் தாக்கி கிரிக்கெட் வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lightning
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் தேபாபிரதா பால். இவர் கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா பூங்காவில் உள்ள கொல்கத்தா கிரிக்கெட் அகாடாமியில் பயின்று வந்தார்.

    நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கி தேபாபிரதா கீழே விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #Lightning
    ×